தமிழக இந்து அறநிலையத்துறை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளித்துறை, தொழில்நுட்பம், ஆசிரியர் மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ள இந்து மதத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.hrce.tn.gov.in AND www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதன்படி இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 6234 601 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 7-ம் தேதி ஆகும்.