மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை நீலகிரி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மலை ரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதால் இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.