சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை கடந்த 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.