தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருமல் மற்றும் சளி தொல்லை காரணமாக நேற்று முன்தினம் மாலை சென்னை மியாமட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் விஜயகாந்த் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்ற நிலையில் தொடர்ந்து சிகிச்சை முடிந்து இன்று அவர் வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.