ஹோலி பண்டிகை மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மெட்ரோ ரயில் தனது இயக்க நேரத்தை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மதியம் 2.30 மணிக்கு மேல் டெல்லி நகரில் மெட்ரோ சேவைகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ராபிட் மெட்ரோ, ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் உட்பட டெல்லி மெட்ரோவின் அனைத்து வழித்தடங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது.

அதனைப் போலவே நமோ பாரத் ரயிலின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மார்ச் 25ஆம் தேதி நமோ பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் பயணிகளின் வசதிக்காக 15 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.