மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் தூத்துக்குடி இடையே பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இன்று மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் அதனைப் போலவே தூத்துக்குடி மற்றும் மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு வருகின்ற ஜூலை 9ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்புரையில் கோவில்பட்டியில் இருந்து காலை 5.02 மணிக்கு புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.