மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சாளுக்கியா விரைவு ரயில் சேவையில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மும்பை தாதர் முதல் திருநெல்வேலிக்கு வாரம் தோறும் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சாளுக்கியா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகிற ஜனவரி 31, பிப்ரவரி 1-ம் தேதி மற்றும்  4-ம் தேதிகளில் எஸ்.என்.எம் காவேரி ராணி, பொன்னூர், ஹரிகர் வழியாக செல்வதற்கு பதிலாக ஹூப்ளி, அமராவதி காலனி, கொட்டுரூ, தேவாங்கரே வழியாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஓசூர், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நாமக்கல், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இந்த ரயில் திருநெல்வேலியை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.