மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சாளுக்கியா விரைவு ரயில் சேவையில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மும்பை தாதர் முதல் திருநெல்வேலிக்கு வாரம் தோறும் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சாளுக்கியா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகிற ஜனவரி 31, பிப்ரவரி 1-ம் தேதி மற்றும் 4-ம் தேதிகளில் எஸ்.என்.எம் காவேரி ராணி, பொன்னூர், ஹரிகர் வழியாக செல்வதற்கு பதிலாக ஹூப்ளி, அமராவதி காலனி, கொட்டுரூ, தேவாங்கரே வழியாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஓசூர், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நாமக்கல், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இந்த ரயில் திருநெல்வேலியை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
மும்பை – திருநெல்வேலி ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!
Related Posts
இன்று பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…
Read moreதமிழகம் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா….???
தமிழகத்தில் பொது தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி…
Read more