மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சாளுக்கியா விரைவு ரயில் சேவையில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மும்பை தாதர் முதல் திருநெல்வேலிக்கு வாரம் தோறும் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சாளுக்கியா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகிற ஜனவரி 31, பிப்ரவரி 1-ம் தேதி மற்றும் 4-ம் தேதிகளில் எஸ்.என்.எம் காவேரி ராணி, பொன்னூர், ஹரிகர் வழியாக செல்வதற்கு பதிலாக ஹூப்ளி, அமராவதி காலனி, கொட்டுரூ, தேவாங்கரே வழியாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஓசூர், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நாமக்கல், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இந்த ரயில் திருநெல்வேலியை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
மும்பை – திருநெல்வேலி ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!
Related Posts
+1 தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடம்…!!
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1,964 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 241 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக அளவில் கோவை மாவட்டம் 96.02 சதவிகிதத்துடன் முதலிடம்…
Read more“ஒரே டிக்கெட் திட்டம்” இன்னும் ஒரு மாதத்தில் அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும். என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு…
Read more