கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கே.வி.சங்கரநாராயணன் (83) காலமானார். இவர் 1997-2001 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 1971ல், முன்சீப்பாக நியமிக்கப்பட்டு, நெய்யாற்றின்கரை, கொட்டாரக்கரை, இரிஞ்சாலக்குடா பகுதிகளில் பணியாற்றினார்.

சங்கரநாராயணன் 1984ஆம் ஆண்டு பத்தனம்திட்டாவில் முதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர், சென்னை சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அவர் தனது மறைந்த தந்தை வழக்கறிஞர் வெங்கிடாத்ரி ஐயரின் கீழ் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். சங்கரநாராயணனுக்கு சாவித்திரி என்ற மனைவியும், சீதா என்ற மகளும் உள்ளனர்.