விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் பி எம் கிசான் திட்டமானது கடந்த 2019 வருடம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணமானது வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்(3 தவணையாக ரூ.2000 வீதம்) வழங்கி வருகிறது.

மொத்தம் 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 16 வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தில் 16வது தவணை தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பயனாளிகள் நிதி உதவி பெறுவதற்கு தங்களுடைய கேஒய்சி விவரங்களை சரி பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நிதி உதவி கிடைக்காமல் போகலாம் .கேஒய்சி சரிபார்ப்பு செய்வதற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.