எஸ்பிஐ வங்கியானது அதிகமான வருமானம் தரக்கூடிய விதமா ஆபத்து இல்லாத முதலீட்டை விரும்புவர்களுக்கு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முதலீடு செய்தால் உங்களுடைய பணம் இரட்டிப்பாகும். அதாவது எஸ்பிஐ வீகேர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஐந்து லட்சத்தை முதலீடு செய்தல் கடைசி காலத்தில் 10 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கான முதலீட்டு காலக்கெடு மார்ச் 31 வரை அந்த வங்கி நீட்டியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய டெபாசிட் தொகைக்கு சிறந்த வட்டி விகிதங்களை எஸ்பிஐ வங்கி வழங்கி வருகிறது.

எந்த ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்திலும் பொது வாடிக்கையாளரை விட மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கிறது. அதன்படி எஸ்பிபி திட்டத்தில் 7.5% வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் முதலீடு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள். அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை செய்யப்படலாம். உங்களுடைய பணம் பத்து வருடங்களில் இரட்டிப்பாகும். அதாவது 5 லட்சம் முதலீடு செய்தால் கடைசி காலத்தில் பத்து லட்சம் கிடைக்கும்.