இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பிரபல பயிற்சியாளருமான சுதிர் நாயக் (71) காலமானார். 1970-71 சீசனில் சுதிர் நாயக் தலைமையிலான மும்பை அணி ரஞ்சிக் கோப்பையை வென்றது. சமீபத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, காயமடைந்த அவர் மருத்துவமனையில் கோமா நிலைக்கு சென்ற நிலையில், உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.