பெரு நாட்டில் பெட்ரோ காஸ்டிலோ என்பவர் அதிபராக இருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க முயற்சித்துள்ளார். ஆனால் நாடாளுமன்றமோ இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்கியது. இதனை அடுத்து துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா போலுவார்டே என்பவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெட்ரோ காஸ்டிலோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் 18 மாதங்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பெற்றோர் காஸ்டிலோ மீதும் இரண்டு முன்னாள் மந்திரிகள் மீதும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு எதிராக அரசியலமைப்பு புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக நேற்று முன்தினம் அந்நாட்டினுடைய நாடாளுமன்றத்தில் 4 மணி நேரமாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் அடிப்படையில் முன்னாள் அதிபரான பெட்ரோ மற்றும் இரண்டு முன்னாள் மந்திரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கான ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிராக 23 பேரும், ஆதரவாக 59 பேரும் வாக்களித்துள்ளனர். அதோடு 3 பேர் வாக்கெடுப்பை நிராகரித்துள்ளனர். இந்த நிலையில் தீர்மானத்திற்கு ஆதரவான வாக்குகள் பெருவாரியாக இருந்ததால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.