அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. இந்த நிலையில் நம் நாட்டில் மிசிசிப்பி மாகாணத்தில் அரக்கபுட்லா நகரில் நேற்று முன்தினம் மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் அவருடைய முன்னாள் மனைவி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடத்திய 52 வயது நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் அந்த நபரிடம் விசாரிக்கையில் அவர் கூறியதாவது “நான் தனிப்பட்ட முறையிலேயே இந்த துப்பாக்கி சூட்டை நடத்தினேன். முதலில் ஒரு பெட்ரோல் நிலைய வளாகத்திற்குள் நுழைந்து அங்கு ஒருவரை சுட்டு கொன்றேன். அதன் பிறகு என்னுடைய வீட்டிற்கு சென்று என் மனைவி உட்பட ஆறு பேரை சுட்டுக் கொன்றேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.