உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் தனது பயனர்களின் வசதிக்காக  புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரே நேரத்தில் பயனர்கள் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியும். முன்னதாக இது 30 என இருந்தது. மேலும், படங்கள், வீடியோக்களை கேப்சனுடன் பகிரும் வசதி உள்ள நிலையில், இனி ஆவணங்களையும் இதேபோல் பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அசல் தரத்தில் புகைப்படங்களை அனுப்பும் வசதி வர உள்ளதாக தெரிகிறது.