தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும் அமைச்சருமான உதயநிதி சென்னை ஆழ்வார் பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தனது பெற்றோருடன் தற்போது வசித்து வருகின்றார். அங்கு முதல்வர் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதனால் முதல்வரை பார்ப்பதற்கு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக அங்கு இட நெருக்கடியும் பாதுகாப்பு பிரச்சனையும் உள்ளதால் அமைச்சர்களுக்கான பங்களாவில் குடியேற உதயநிதி முடிவு செய்துள்ளார்.

அவருக்காக தற்போது சென்னையில் உள்ள குறிஞ்சி என்ற அரசு பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இங்கே இதுவரை சபாநாயகர் அப்பாவு வசித்து வந்த நிலையில் கடந்த ஜனவரியில் அவர் அருகில் உள்ள மலரகம் என்ற பங்களாவுக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் உதயநிதி ஸ்டாலின் அரசு பங்களாவுக்கு குடியேற உள்ளார்.