தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் நேற்று பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரின் அறிவுரைப்படி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏழு திருக்கோவில்களுக்கு 36 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள.ராஜராஜ சோழன் காலத்தில் நடைபெற்ற திருப்பணிகளுக்கு இணையாக நம்முடைய நிகழ்கால ராஜராஜ சோழன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது என்று பெருமையுடன் பேசினார்.