IPL கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. ரசிகர்கள் வெகு ஆர்வத்தோடு ஐபிஎல் போட்டியை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் 5 மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க 1 மணி நேரத்துக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.