இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்து உள்ளார். ராமேஸ்வரம் to தலைமன்னார் (50 கி.மீ), ராமேஸ்வரம் to காங்கேசன் துறை (100 km) போன்ற வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தியா-இலங்கை இடையில் குறைந்ததூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம் 2024-ல் நிறைவுறும் எனவும் அமைச்சர் கூறினார்.