அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில், மத நம்பிக்கையின் பெயரால் நடந்த ஒரு விபரீதச் சம்பவம் பார்ப்போரை “இப்படியும் கூடவா சிந்திப்பார்கள்?” என்று யோசிக்க வைத்துள்ளது. அங்குள்ள தேவாலயம் ஒன்றில் மதபோதகர் ஒருவர், தனது ஆன்மீக சக்தியை நிரூபிப்பதாகக் கூறி, பிரார்த்தனையின் போது மிகவும் ஆபத்தான கட்டுவிரியன் (Rattlesnake) பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு சாகசம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பாம்பு அவரைப் பலமாகக் கடித்தது.
ஆனால், “தனது அசைக்க முடியாத நம்பிக்கை தன்னைக் குணப்படுத்தும்” என்று நம்பிய அந்தப் போதகர், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள பிடிவாதமாக மறுத்துவிட்டார். நிலைமை மோசமானதைக் கண்ட மருத்துவக் குழுவினர் (Paramedics), அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தப் போதகர் பாம்பு விஷம் ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
A beautiful example of religious stupidity🥹
This Kentucky pastor was demonstrating his spiritual strength by handling a rattlesnake during a prayer delusions when he was bitten.
He refused treatment, believing that faith would heal him. Paramedics forcefully took him to the… pic.twitter.com/wIWtdJhoo8
— Mario (@PawlowskiMario) December 23, 2025
ஆன்மீக பலம் உயிரைக் காக்கும் என்ற அவரது கண்மூடித்தனமான நம்பிக்கை, இறுதியில் அவரது உயிரையே பறித்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் “மத ரீதியான அறியாமை” (Religious Stupidity) என்ற பெயரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியலை விடத் தீவிரமான நம்பிக்கை சில நேரங்களில் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.
