இஸ்ரேல் ஹமாஸ் இடையே அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 23ஆம் தேதி வரை போர் நீடித்து வந்தது. இதனிடையே நவம்பர் 24 முதல் நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த நான்கு நாட்களில் இரண்டு தரப்பினரும் அவர்களிடம் இருக்கும் பிணைய கைதிகளையும் சிறை கைதிகளையும் விடுவித்து வந்தனர். இந்த நான்கு நாட்கள் முடியும் தருவாயில் மீண்டும் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு பிணைய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 10:30 மணியுடன் நீட்டிக்கப்பட்ட இரண்டு நாள் போர் நிறுத்தமும் முடிவடைய உள்ளது. இதனிடையே மீண்டும் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில் கத்தார், அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.