இஸ்ரேல் ஹமாஸ் இடையே அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 23ஆம் தேதி வரை போர் நீடித்து வந்தது. இதனிடையே நவம்பர் 24 முதல் நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த நான்கு நாட்களில் இரண்டு தரப்பினரும் அவர்களிடம் இருக்கும் பிணைய கைதிகளையும் சிறை கைதிகளையும் விடுவித்து வந்தனர். இந்த நான்கு நாட்கள் முடியும் தருவாயில் மீண்டும் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு பிணைய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே இன்று காலை 10:30 மணியுடன் நீட்டிக்கப்பட்ட இரண்டு நாள் போர் நிறுத்தமும் முடிவடைந்தது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் அப்படியே தொடரும் என்றும் பிணைய கைதிகளை மீட்கும் நடவடிக்கை தொடர வேண்டும் என்பதற்காக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.