அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஆஸ்பிரே ரக விமானம் ஒன்று ஜப்பானின் யகுஷிம தீவு கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் திடீரென விபத்தில் சிக்கி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜப்பான் கடலோர காவல் படைக்கு 2:47 மணியளவில் தகவல் வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விமானம் ரோந்து படகு போன்றவை அனுப்பி வைக்கப்பட்டன. அந்த விமானத்தில் எட்டு பேர் பயணித்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மீதம் 7 பேர் என்ன ஆனார்கள் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.