போப் ஆண்டவர் துபாயில் நடைபெற இருக்கும் ஐநா அவையின் உலக காலநிலை மாநாட்டில் பங்கேற்க இருந்தார். இந்நிலையில் கடுமையான காய்ச்சல் மற்றும் நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்சினையால் போப் ஆண்டவர் பாதிக்கப்பட்டிருப்பதாக வாடிகன் அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய காரணத்தினால் துபாய் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.