மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதோ தொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. ஏப்ரல் 30ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், மே இரண்டாம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் மே ஐந்தாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.