எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வேண்டுமானாலும் தாக்கல் செய்யாத நிலையில் அவை தலைவர் பெயரில் அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுக்கான வெற்றி சான்றிதழ்களை  தேர்தல் ஆணையர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இபிஎஸ் இடம் வழங்கினர்.

அதிமுக அலுவலகம் சென்று பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலையில் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் உடன் எம்ஜிஆர் தோற்றத்தில் காட்சி அளித்தார் . இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் பூரித்து மகிழ்ந்து வருகிறார்கள்.