அதிமுக பொதுச்செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இபிஎஸ்-ன் 69வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னையில் எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வளர்மதி 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் தரையில் சாதத்தை வைத்து, இபிஎஸ்-ன் நலனுக்காகவும், அவர் முதல்வராக வேண்டியும் மனமுருக பிரார்த்தனை செய்து மண் சோறு சாப்பிட்டு சாமி தரிசனம் செய்தார்.