சென்னை தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க-வின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது  “தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசரின் துறை தொடர்பாக பல குற்றச்சாட்டை கூறினோம்.

ஆவின் பால் விலை ஒரே வருடத்தில் 3 முறை உயர்த்தப்பட்டது. அமைச்சர் பிடிஆர், முன்னாள் அமைச்சர் நாசர் ஆகியோர் பாஜகவிற்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என கேட்கிறீர்கள். பாஜகவை பொறுத்தவரையிலும் நாங்களாக யாரையும் எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்கமாட்டோம். எனினும் கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. நாங்கள் தாழ்ப்பாள் போடவில்லை, எப்போதுமே கதவு திறந்து தான் உள்ளது” என்றார்.