இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட பதிவுக்கு நடிகை திரிஷா அண்மையில் ரிப்ளை செய்துள்ளது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆடவரி மதலக்கு அர்த்தலே வீரளு என்ற படத்தின் இரண்டாம் பாவத்தை இயக்க இயக்குனர் செல்வராகவன் கடந்த 2013 ஆம் ஆண்டு விருப்பம் தெரிவித்தார். இதற்கு இன்று நடிகை திரிஷா நான் ரெடி என ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் யாரடி நீ மோகினி படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் ஆகும்.