சென்னையில் நேற்று நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாகவும், முறையான ஏற்பாடுகளும், பாதுகாப்பு வசதிகளும் அளிக்கப்படாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையின் ஒரு மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த், நடந்தது என்ன என்பது குறித்து இன்று இரவுக்குள் விளக்கம் வரும் என கூறி சென்றுள்ளார்.