செப்டம்பர் 10 ஆம் தேதி நேற்று நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேக்கு டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த், “ரசிகர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் ஏற்பட்ட குழப்பம் தான் அத்தனைக்கும் காரணம்.

ஒவ்வொரு பிரிவாக பிரித்து வைத்திருந்த நிலையில் ஒரே இடத்தில் அத்தனை பேரும் குவிந்தனர். நிகழ்ச்சிக்கு உள்ளே வர முடியாதவர்கள் யார் ” என கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்” என விளக்கமளித்துள்ளார்.