ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால், சென்னை ECR சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன என்ற தகவலையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரித்து அறிக்கையாக தருமாறு டிஜிபி ஆணையிட்டுள்ளார்.

இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியில் நானே பலி ஆடாக இருந்துவிட்டுப் போகிறேன் என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், சுனாமி போல் வந்த ரசிகர்களை சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கவில்லை. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது என்னை வெகுவாக பாதித்துள்ளது. ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு பொறுப்பேற்கிறேன். என்றும் கூறியுள்ளார்.