ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால், சென்னை ECR சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன என்ற தகவலையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரித்து அறிக்கையாக தருமாறு டிஜிபி ஆணையிட்டுள்ளார்.

இந்நிலையில் டிக்கெட் வாங்கியவர்கள் அதன் நகலை உடனடியாக எங்களுக்கு அனுப்புங்க என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பார்ந்த சென்னை மக்களே, டிக்கெட் வாங்கியவர்களும், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்களும் ([email protected]) என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளை குறிப்பிட்டு டிக்கெட்டு நகலை பகிருங்கள். அனைத்திற்கும் உரிய தீர்வு காணப்படும்” என தெரிவித்துள்ளார்.