சனாதனம் விவகாரத்தில் தமிழக அரசியல் தொடர்ந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை மலேரியா, டெங்கு, கொரோனாவை போல் ஒலிக்க வேண்டும் என்று சொன்ன மேடையில் ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இருந்ததை கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று மாநில முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைசர் உடனே பதவி விலக வேண்டும் என மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அலுவலகங்கள் முன்பு இந்த போராட்டத்தை பாஜகவினர் நடத்தினர்.  திருச்சியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டார்.

இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கொசுபத்தி போட்டோவை போட்டு சனாதன விவகாரத்தில்  உறுதியாக இருப்பதை உணர்த்தினார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நண்பனாக இருந்து வரும்,  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பின் மகேஷ் உதயநிதி ஸ்டாலின் போட்ட கொசுபத்தி போட்டோவை பகிர்ந்து ”நீ விளையாடு’நண்பா” என பகிர்ந்துள்ளார்.