ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தேர்வு தொடங்குவதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில்  பொது வினாத்தாள் முறையை அமல்படுத்த இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து   இந்த காலாண்டு விடுமுறையுடன் அரசு விடுமுறையும் வருகிறது. இதனால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.