ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது லக்னோ அணிக்காக குருணால் பாண்டியா விளையாடி வருகிறார். இவர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் ஆவார். இந்நிலையில் குருணால் பாண்டியாவுக்கு கடந்த 21ஆம் தேதி இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் தன்னுடைய மனைவி முதல் மகன் மற்றும் இரண்டாவது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு தன் மகனுக்கு வயு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு மாடல் அழகியான பன்குரி சர்மா என்பவரை குருணால் பாண்டியா திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கவிர் (வயது 2) என்ற ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.