ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இடம்பெற வேண்டிய இந்திய வீரர்கள் குறித்தான தங்கள் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளார். அவர் விராட் கோலிக்கு பதிலாக சஞ்சு சம்சனை தேர்வு செய்துள்ளார்.

அதன்பிறகு ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் குருணால் பாண்டியாவை அணியில் சேர்க்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் அவர் மூத்த வீரர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களை அணியில் சேர்த்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), குருணால் பாண்டியா, மயங்க் யாதவ், ஹர்ஷித் ராணா, ஆவேஷ் கான், சிராஜ், பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், ஜடேஜா, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.