ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் குறித்து கொல்கத்தா அணியின் முன்னாள் டைரக்டர் ஜாய் பட்டாச்சாரியா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட தகுதியற்றவர் என்று நான் நினைக்கிறேன்.

எனக்கு ரோகித் சர்மா மீது மிகுந்த மரியாதையுண்டு. அவர் ஒரு அற்புதமான வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் அவரை கேப்டனாக நியமித்தால் அது இந்திய அணிக்கு பாதகமாக அமையலாம். ஒருவேளை டி20 போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ரா கேப்டனாக செயல்பட்டால் அது பலன் அளிக்கும் என்று நம்புகிறேன். அதோடு கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அனைத்து சாதனைகளையும் செய்து விட்டார். அவர் செய்ய வேண்டிய ஒரே கடமை உலகக் கோப்பையை வென்று கொடுப்பது மட்டும்தான். மேலும் அவருடைய முடிவை நான் மதித்தாலும் அவர்  கேப்டனாக செயல்படுவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.