ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த தங்களுடைய கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி இந்திய அணியில் இடம்பெற வேண்டிய வீரர்கள் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, டி20 உலகக்கோப்பை போட்டியில் அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நிச்சயமாக இடம்பெற வேண்டும். டி20 போட்டியில் யாராவது கடைசி நேரத்தில் களம் இறங்கி 15 முதல் 20 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக அக்சர் படேலால் அதை செய்ய முடியும். இவர் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று தலைமுறைகளிலும் தலை சிறந்த வீரர். எனவே அக்சர் படேல் கண்டிப்பாக டி20 போட்டியில் இடம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.