கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆக.14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆக.14ல், அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது.

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆக. 14ல் பொங்கல் வழங்கப்படுகிறது. எனவே, அன்றைய நாளில் விடுமுறை எடுக்காமல், அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வர தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். சுவையான பொங்கல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது