கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் கோவை, சென்னை மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விடுமுறை அளித்து, தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இதனால், ஆகஸ்ட் 29 ஆம் தேதி கோவை மற்றும் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களை தவிர, மேலும் எந்தந்த மாவட்டங்களில் ஓணம் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.