மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை
என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜோசப், நாகரத்னா ஆகியோர் தெரிவித்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்னர்.

முன்னதாக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என எம்எல் ரவி என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடிசெய்தது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்திருந்தது.