பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் பழ. நெடுமாறன் கூறியபடி பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது ஒன்றும் இல்லை என்று வைகோ தெரிவித்தார்.

முன்னதாக பிரபாகரன் நலமுடன் இருப்பதாக பழ. நெடுமாறன் கூறியிருந்தார். மேலும் அவரது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சி என வைகோ தெரிவித்துள்ளார். இதனிடையே இலங்கை ராணுவமும் பிரபாகரன் உயிரோடு இல்லை என தெரிவித்திருந்தது. பலரும் இது குறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.