வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், மீன் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்ளும் போது சில நேரங்களில் எதிர்பாராத விதமாக மின் விபத்துகளும் ஏற்படுகின்றது. அதன்படி கடந்த 9 மாதங்களில் தமிழகத்தில் பல மின்விபத்துகளில் சிக்கி சுமார் 40 மின்வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் 487 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தவிர 341 விலங்குகளும் மின்விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.