தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக மார்ச் 15 முதல் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் www.tnstc.in  என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.