தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ரூ.600 கோடி பணம் பெற்றதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பாஜக இந்தியாவில் 19 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அப்படி இருந்தும் தேர்தல் பத்திரங்களை குறைவாகவே வாங்கியுள்ளது. ஆனால் திமுக தமிழகத்தில் மட்டுமே அதிகாரத்தில் இருந்துகொண்டு இந்த அளவுக்கு பணம் பெற்றுள்ளது. இதன் மூலம் தேர்தல் பத்திரங்களில் யார் அதிக முதலீடு செய்துள்ளார்கள் என்பது தெரியவரும் என்றார்.