வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் வலுவடைந்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.