சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வித்தியாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகம் சார்பாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாவட்டங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு டேபிள் டென்னிஸ் செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசியுள்ளார். இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி உள்ளனர். இந்த போட்டியில் 9 வயதிற்கான பிரிவில் காரைக்குடி வித்யா கிரி பள்ளி மாணவர் சர்வின், 11 வயதிற்கான மாணவர்களுக்கான பிரிவில் காரைக்குடி கார்மல் பள்ளி மாணவர் ஜெயச்சந்திரன், பெண்கள் பிரிவில் இண்டல் வித்யாலயா மாணவி திவ்யதர்ஷினி போன்றோர்  முதலிடம் பெற்றுள்ளனர்.

மேலும் 13 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தி லீடர்ஸ் பள்ளி மாணவர் அகிலேஷ், பெண்கள் பிரிவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவி சனா போன்றோர்  முதலிடம் பெற்றனர். இந்நிலையில் மாணவி சனா, மாணவர் ஜெயச்சந்திரன் போன்றோர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதால் அவர்களை சிவகங்கை மாவட்ட தலைவர் செல்வ குமரன், சிறப்பு விருந்தினர் டாக்டர் மதுசூதனன் போன்றோர் பாராட்டியுள்ளனர். மேலும் போட்டி ஒருங்கிணைப்பாளர் மெய்யப்பன், இடைச் செயலாளர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியுள்ளனர்.