நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சார்பாக பணியின் போது இறந்து போன பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெற்றி செல்வம் தலைமை தாங்கியுள்ளார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார், தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் போன்றோர் கலந்து கொண்டு பேசினர்.