திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தி.மலை அண்ணா சிலை அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் மிக மிக பின்தங்கிய மாவட்டம். இந்த மாவட்டம் வளர்ச்சி பெற வேண்டுமானால் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இப்போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது “தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாமக நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்னும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை இரண்டாகவோ மூன்றாகவோ பிரிக்க வேண்டிய தேவை உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.